கர்நாடகாவில் ரஜினி கொடும்பாவி எரிப்பு
நேற்று வெளியான காவிரி குறித்த இறுதி தீர்ப்பு குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட ரஜினிகாந்த் உருவப்பொம்மையை கர்நாடகாவில் உள்ள ஒருசில அமைப்பினர் எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்
ரஜினிகாந்த் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவரை கன்னடர் என்று தமிழகத்தில் உள்ள ஒருசில எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகாவில் ரஜினி, தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இருமாநிலங்களுக்கும் இடையே தர்மசங்கடமான நிலையில் ரஜினி உள்ளார்.
இந்த நிலையில் காவிரி தீர்ப்பு குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, ரஜினியின் உருவ பொம்மை எதிர்த்தனர். சன்னப்பட்னா நகரில் கன்னட அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.