shadow

ஜெயலலிதாவின் முடிவுக்காக காத்திருக்கும் கனிமொழியின் முன்னாள் கணவர்
kanimozhi
சிவகாசியின் பிரபல பட்டாசு தொழிலதிபரும், கனிமொழியில் முன்னாள் கணவருமான போஸ், தற்போது பிசினஸ், குடும்பம் என அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீகத்தில் முழுஅளவில் இறங்கிவிட்டார். அமெரிக்காவில் 1 லட்சம் சீடர்களுடன் ஆன்மிகத்தை பரப்பிவரும் போஸ், தமிழகத்திலும் கிளை பரப்ப ஆயத்தமாகிவருவதாக கூறப்படுகிறதுல் மேலும் அவர் எழுதிய  ‘மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

சமீபத்தில் போஸ், ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் கனிமொழியுடன் வாழ்க்கை நடத்தியது குறித்து போஸ் கூறியபோது, “. கனிமொழியை திருமணம் செய்வதற்கு முன்பே, ‘என்னை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது, நீயும் அரசியலில் ஈடுபடக்கூடாது, என்னை எந்த விஷயங்களிலும் நிர்பந்திக்கக்கூடாது’ என்று சில நிபந்தனைகளை போட்டேன். அதை ஏற்றுக்கொண்டபின்தான் திருமணம் நடந்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே அதை சரியாக கனிமொழி கடைபிடிக்கவில்லை. அதற்கு பிறகு நாங்கள் ஒருமித்த கருத்துடன் விலகிக் கொண்டோம்” என்று கூறினார்.

மேலும் இரண்டாவது மனைவி துபாயில் இருப்பதாகவும், மூன்றாவது மனைவியுடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறிய போஸ், ஆன்மீகப்பணியும், குடும்ப வாழ்க்கையும் சரிசமமாக போய்க்கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும் அமெரிக்காவில் ஆசிரமத்தை தொடங்கினாலும் தமிழகத்திலும் எனது ஆன்மிக பணியை துவங்க ஆசைப்படுவதாகவும், தமிழகத்தில் பல்வேறு  நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் முன்னிலையில் தனது புத்தகத்தை வெளியிட முதல்வரிடம் நேரம் கேட்டிருப்பதாகவும், முதல்வரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று காத்திருப்பதாகவும், அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply