சென்னையில் இருந்து திடீரென கிளம்பிய கனிமொழி: 9 மணி நேரம் காரில் பயணம் செய்ததால் பரபரப்பு

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி சுமார் 9 மணி நேரம் காரில் பயணம் செய்து அங்கு கொரோனா பணிகளை பார்வையிட்டு உள்ளார்

சென்னையில் நேற்று முன்தினம் இரவு கிளம்பிய கனிமொழி எம்பி, நேற்று அதிகாலை தூத்துக்குடி சென்று அடைந்தார்.அதன்பின் அங்கு உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சந்தித்து தனது தொகுதி எம்பி நிதியாக ரூ 1 கோடியை அளித்தார்.,

அதன்பின் அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைக்க 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தார் அதன் பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் மாவட்ட கலெக்டரிடம் கேட்டறிந்தார் சென்னையிலிருந்து உதவியாளர் கூட இல்லாமல் டிரைவருடன் மட்டும் அவர் தூத்துக்குடிக்கு சாலை வழியே சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Leave a Reply