ஆட்டத்தை தொடங்கிய முருகப்பெருமான்!

யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட செந்தில்வாசன் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட யூடியூப் நிர்வாகி செந்தில்வாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கந்தசஷ்டி கவசத்தை தவறாக பேசியவரும் அவரது மனைவியும் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply