நெல்லூரில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு சென்ற காஞ்சி சங்கராச்சாரியாருக்கு திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சந்திர மெளளீஸ்வரர் கோவிலுக்கு நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவரது அழைப்பை ஏற்று நெல்லூர் சென்ற ஜெயேந்திரர், விழாவில் பங்கேற்றபோது, திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரது சீடர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த தகவல் தெரிந்தவுடன் சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு ஒன்று நெல்லூருக்கு விரைந்தனர். சென்னை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் ஜெயேந்திரர் சுவாமிகள் தற்போது நலமாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் அவரது சீடர்களும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply