shadow

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் அனுமதி

kanchiகடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சுவாமிகள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சந்திரமவுலீஸ்வர வெங்கடேச சுவாமி கோவிலில் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜெயேந்திரருக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் விஜயவாடாவில் உள்ள ஆந்திரா ஹார்ட் அன்ட் பிரையன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு நுரையீரலில் சளி தேங்கியதால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு டாக்டர் ரவீந்திரநாத் தலைமையிலான டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள ஜெயேந்திரரின் பிரத்தியேக டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் ஜெயேந்திரர் குணமடைவார் என்றும் விஜயவாடா டாக்டர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply