shadow

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது சங்கராச்சாரியர் உட்கார்ந்த விவகாரம்: சங்கரமடம் விளக்கம்

நேற்று நடந்த ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது உட்கார்ந்திருந்தார் என்று கூறப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவர்னர் உள்பட மேடையில் உள்ள அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுத்து எழுந்த நின்ற நிலையில் சங்கராச்சாரியர் மட்டும் உட்கார்ந்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சி முடிவின்போது ஒலிக்கப்பட்ட தேசிய கீதத்துக்கு சங்கராச்சாரியர் எழுந்து நின்றார்.

இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது காஞ்சி விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply