shadow

காவிரி பிரச்சனையில் கமல் செய்த தவறு

kamalகாவிரி பிரச்சனை காரணமாக தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் பதட்டமான சூழ்நிலை இருந்து வரும் நிலையில் இரு மாநில திரையுலகினர்களும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இதுகுறித்து தனது வேதனையை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்’ என்று தெரிவித்துள்ளார்.

முதலில் ‘சரித்திரக்கண்ணாடி’ என்று பதிவு செய்வதற்கு பதில் ‘சரித்திரக்கமண்ணாடி’ என்று பதிவு செய்திருந்த கமல், பின்னர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.

Leave a Reply