shadow

13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த கமல்-கவுதமி பிரிந்தனர்

gauthami-is-kamals-choiceஉலகநாயகன் கமல்ஹாசனின் வாழ்க்கை துணைவியாக கடந்த 13 ஆண்டுகள் வாழ்ந்த நடிகை கவுதமி இன்று திடீரென அவரை பிரிந்தார். இதுகுறித்து கவுதமி தனது டுவிட்டரில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சுமார் 13 ஆண்டு காலம் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த நான் சில காரணங்களால் கமலை இன்று முதல் பிரிகிறேன் என்பதை மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேஎன். இந்த முடிவு என் வாழ்வில் மிகவும் கொடுமையானது. சேர்ந்து வாழும் உறவில் இருவரது பாதையும் நேர்மாறாக இருக்கும் பட்சத்தில், ஒருவரது கனவுகளை சமரசம் செய்து கொண்டு, உண்மை சூழலை ஏற்றுக் கொண்டு மற்றொருவரது பாதையில் செல்ல வேண்டிய நிர்பந்தமும் உள்ளது

மேலும் யாரையும் குறை சொல்வதோ, அனுதாபம் தேடுவதோ என் நோக்கமல்ல. அனைத்துக்கும் மேலாக சிறந்த தாயாக செயல்பட வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளதாக கருதுகிறேன். எனது மகளின் எதிர்காலம் கருதியே கமலை பிரிகிறேன்.

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. காலமாற்றத்திற்கு ஏற்றவாறு மனிதர்கள் மாறுவார்கள். அதுபோன்ற ஒரு சூழலில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாழ்க்கையை சந்தோஷமாக வாழ எந்த ஒரு உறவிலும் மன நிம்மதி அவசியம். கமல்ஹாசனுடன் ஆலோசித்த பிறகே இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

சுமார் 2 ஆண்டுகளாக தீவிரமாக யோசித்த பிறகே மிகுந்த மன வருத்தத்துடன் இம்முடிவை எடுத்துள்ளேன். மேலும், திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பில் இருந்தே நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. இனியும் ரசிகையாக அவரது வெற்றிகளை ரசிப்பேன். இந்த 29 ஆண்டுகால நட்பில் கமலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது வாழ்வின் மிக கடுமையான தருணங்களில் என்னுடன் துணை நின்றதற்கு பல வகையில் நன்றி கடன்பட்டுள்ளேன்

இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.,

Leave a Reply