கமல்ஹாசன் அதிரடி டுவிட்
பிற மாநிலங்களில் இருந்து மும்பை, மற்றும் டெல்லி சென்றவர்கள் தற்போது தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறி போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டப்படும் காட்சிகளும் நடந்து வருகிறது.
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: பால்கனியில் உள்ள அனைவரும் தரையில் உள்ளவர்களை கவனிப்பது கிடையாது. முதலில் அது டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது நேர வெடிகுண்டு மாதிரி. அது கொரோனாவை விட பெரிய ஆபத்தானது. அது நெருக்கடியாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒட்டு மொத்த தேசத்தின் குரலாய் நம்மவர்
குரல் ஒலிக்கிறது, ஒலிக்கும் என்று ஒருவர் இந்த டுவிட்டுக்கு கமெண்ட் அளித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.