shadow

காவிரி விவகாரம் குறித்து கமல் தெரிவித்த ஆவேச கருத்து

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் சமீபத்தில் புதிய கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனும் தனது பங்கிற்கு டுவிட்டரில் ஒரு ஆவேச கருத்தை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘`பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்.’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை இதுவரை நேரடியாக விமர்சனம் செய்ய கமல் தயங்கி கொண்டிருந்ததாக அவர் மேல் இருந்த குற்றச்சாட்டுக்களை இந்த டுவீட் தகர்த்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

//twitter.com/ikamalhaasan/status/976802754784931840

kamal tweet about cauvery issue

Leave a Reply