மறைந்த சிறுமி ஆசிபாவின் ஆன்மாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிபா, இந்து கோவில் ஒன்று 8 நாட்கள் பூட்டி வைக்கப்பட்டு 8 கயவர்களால் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இந்த கொடூர செயலை செய்தவர்களில் அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உள்ள்போது இதுகுறித்து கமல்ஹாசன் போட்டி டுவீட் இதோ:
சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய அவள் உங்களது மகளாக இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்க தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்க தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இந்த கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். உன்னை நினைவு கூர்கிறோம், உன்னை மறக்கவும் மாட்டோம்
இவ்வாறு கமல் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.