தமிழக அரசை விமர்சிக்க கமலுக்கு முழு உரிமை உண்டு
கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சிக்க முழு உரிமை உண்டு. யாரும் அவரைத் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. அப்போது கமல்ஹாசன் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு வைகோ பதிலளித்தார். இந்திய ஜனநாயக நாட்டில் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய முழு உரிமை உண்டு. அவரை யாரும் தடுக்க முடியாது என்று அக்கேள்விக்குப் பதிலளித்தார் வைகோ.
அதேபோல ஊழல் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தமிழகத்தினை ஊழல் புற்றுநோய் போல் அழித்து வருகிறது. மக்கள் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள். நேர்மை, நியாயம் அழிந்து போய் விட்டது என்று கூறினார் வைகோ.
Leave a Reply
You must be logged in to post a comment.