மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’, தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீது ஜோசப் தமிழில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், கவுதமி, ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.
இந்த படத்தின் கதையில் திருப்பமாக வருவது கமல்ஹாசனின் மகள் கேரக்டர். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக பல நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் கேரக்டருக்கு பொருந்தாததால் நீக்கப்பட்டனர். தற்போது ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நிவேதா, கமல்ஹாசன் – கவுதமியின் மகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தில் இந்த கேரக்டர் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக நிவேதா, கமல்ஹாசனின் வீட்டிலேயே தங்கி நடிப்புப்பயிற்சி பெற முடிவு செய்துள்ளார். மேலும் கமல்ஹாசன் – கவுதமி தன்னை தங்களது மூன்றாவது மகளாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நிவேதா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இந்த கேரக்டரில் நடிக்க ஸ்ருதிஹாசன் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் இந்த வாய்ப்பு நிவேதாவுக்கு சென்றதால் அவர் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும், மூன்றே மாதங்களில் படத்தை முடித்து விட்டு 2015ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.