கமலின் மறைமுகமான அரசியல் அறிவிப்பா இது?
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே அரசியல் குறித்து தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டரில் ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். இந்த கவிதையின் கருத்துக்கள் அவர் விரைவில் அரசியலில் குதிக்க போகிறார் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது
இதோ இதுதான் அந்த கவிதை
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில்
உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முன்னவரே தலைவர்
Leave a Reply
You must be logged in to post a comment.