shadow

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். கமல்ஹாசன் ஆவேச டுவீட்

கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டரில் மட்டுமே ஆவேச அரசியல் செய்து வரும் கமல்ஹாசன் அவ்வப்போது இரவில் சில ஆவேச டுவீட்டுக்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் நேற்றிரவு அவர் பதிவு செய்த டுவீட்டில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது

வழக்கம்போல் புரிந்தும் புரியாமலும் இருக்கும் இந்த டுவீட்டில் கமல் சொல்ல வருவது கோவில்களில் கடவுள் பெயரை சொல்லி ஊழல் செய்பவர்களை கண்டு சகிக்க முடியாது என்பதுதான்.

Leave a Reply