shadow

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? சோனியா காந்தியை சந்தித்த பின் கமல் பேட்டி

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சோனியாவிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், அதை முறைப்படி பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் கட்சி குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற கமல்ஹாசன், அங்கு தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகளை சந்தித்து தனது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல், சோனியா காந்தையை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார்.

மேலும் அவர், தமிழகத்தின் அரசியல் சூழல் பற்றியும், தேசியளவில் நிலவும் அரசியல் நிலையை குறித்தும் சோனியா உடனான சந்திப்பில் பேசியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்த கமல்ஹாசன், மக்களவை தேர்தல் பற்றியும், அதற்கு கூட்டணி சேருவது பற்றியும் சோனியா உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்திவில்லை என்று தெரிவித்தார் கமல்ஹாசன்

Leave a Reply