காவல்துறையினர் என்னை துன்புறுத்துகின்றனர். கமல்ஹாசன் மனுதாக்கல்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து குறித்து கமலஹாசனை ஏற்கனவே போலீசார் 3 மணி நேரம் விசாரணை செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தியதாக கமலஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
’இந்தியன் 2’விபத்து குறித்து ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விபத்தை நடித்து காட்டுமாறு காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கமலஹாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது
இதனையடுத்து இந்த மனு இன்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.