கேரள முதல்வருக்கு கமல் பாராட்டு
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசையும், தமிழக அரசியல்வாதிகளையும் தனது டுவிட்டரில் அவ்வப்போது காரசாரமாக விமர்சனம் செய்யும் நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடைபெற்று வரும் கம்யூனிச ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச ஆட்சி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை பாராட்டி கேரள அரசுக்கு கமல் ஒரு இமெயில் அனுப்பியுள்ளார். அந்த இமெயிலில் அவர் கூறியிருப்பதாவது:
தங்கள் ஓராண்டில் மிகச்சிறந்த நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள். இதை கேரள மக்களின் மகிழ்ச்சியில் நான் பங்கெடுத்துக் கொள்கிறேன். மற்ற மாநில அரசுகளுக்கு முன்னோடியான மாநிலமாக திகழச் செய்து வருகிறீர்கள். அண்டை மாநிலத்துடன் நல்ல ஒத்துழைப்பு வழங்கும் விதமாக நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன். ” என தனது வாழ்த்து செய்தியில் கமல் தெரிவித்துள்ளார்.
2016ல் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் கேரள மாநிலத்தின் ஓராண்டு நிறைவுக்கு மட்டும் கமலஹாசன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.