தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல், ரஜினி கண்டனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூடு சமப்வத்தில் இதுவரை 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ரஜினி மக்கள் மன்றம் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.
இதேபோல் கமல்ஹாசனும் இந்த சம்பவத்திற்கு தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்ததோடு, இன்று தனி விமானம் மூலம் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க தூத்துகுடி சென்றுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.