shadow

தமிழக அமைச்சரின் தெர்மோகோலை கலாய்த்த கமல்-ராதாரவி

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் கொண்டு மூடும் முயற்சியை செய்தார். இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த திட்டம் பத்தே நிமிடங்களில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நேற்று ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் இசை விழாவில் கலந்து கொண்ட கமல் பேசியபோது, ”இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். நன்றாக வந்துள்ளது. ஒரு சினிமா ரசிகனாக எல்லோருக்கும் முன் இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன் என்பதில் பெருமைபப்ட்டு கொள்கிறேன்

இந்த படத்தின் டிரைலரில் இருந்து இதுவொரு ஆவிக்கதை போல் தெரிகிறது. ஆனால் தெர்மோகோல் போட்டு மூட முடியாத ஆவிகதை’ என்று கூறி அமைச்சரை கலாய்த்தார்.

இதே விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறியபோது, ‘ இந்த தெர்மோகோல் ஐடியா முன்பே வந்திருந்து அந்தம்மா மேல் போட்டிருந்தால் அவருடைய ஆவி போயிருக்காதே என்றுதான் எனக்கு தோன்றியது. ஏனெனில் அந்தம்மா கட்சியில் இருந்த நன்றி விசுவாசத்தால் இதை கூறுகிறேன்

Leave a Reply