கருணாநிதியிடம் கவிழ்ந்துவிடுவாரா கமல்?
கவியரசு வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் கருணாநிதியும், உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொள்ள உள்ளனர்
இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கமல்ஹாசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் பேசவிருப்பது ஆளும் அதிமுகவை உற்று நோக்க வைத்துள்ளது.
கமல்ஹாசனை தனக்கு ஆதரவாக இழுக்க கருணாநிதி இந்த மேடையை பயன்படுத்தி கொள்வாரா? அல்லது இதுவரை எந்த கட்சியின் முத்திரையும் தன் மீது பதியாமல் நழுவி வரும் கமல், இந்த மேடையிலும் தனது திறமையை நிரூபிப்பாரா? என்பதை தமிழகமே உற்றுநோக்கியுள்ளது.
இதுகுறித்து கமல் ரசிகர் ஒருவர் கூறும்போது, “கமல் எப்போதும் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர். வைரமுத்துவின் நெருங்கிய நண்பரும் கூட. அந்த வகையில்தான் இந்த நூல் வெளியீட்டு நிகழ்சியில் கலந்து கொள்கிறார். இதில் அரசியலுக்கு இடமில்லை’ என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.