முடியவில்லையா? ஒதுங்கிக்கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்த கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்வதுடன், ஆட்சியாளர்கள் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதன்மூலம் அவரது அரசியல் பிரவேசம் பற்றிய விவாதமும் நடைபெற்று வருகிறது. அரசுத் துறைகள் மீது ஊழல் புகார் கூறம் கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்கு, தனக்கே உரித்தான ஸ்டைலில் கமல் பதிலடி கொடுத்து வருகிறார்.
அவ்வகையில் இன்று டுவிட்டரில் மீண்டும் கருத்தை பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
பள்ளிப் படிப்பை முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். டெங்குவால் என் மகள் இறப்பின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிககை எடுக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த முடியாவிட்டால் விலகிக் கொள்ளலாம்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.