shadow

கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் மேலும் 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தீபாவளித் திருநாளுக்கு ஆக தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் போடப்பட்டு இருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சியில் அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப் படுத்தினாலும் 6 பேர் பட்டாசு கடைகள் மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது