விஜய்யை முதல்வராக்க திட்டம் போட்ட எஸ்.ஏ.சி. தடுத்த தாணு
விஜய் நடித்துள்ள ‘தெறி’ மற்றும் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி ஆகிய படங்களை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘நையப்புடை’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரில் எஸ்.ஏ.சி பேசும் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளதாம். ‘ஒரு தமிழன் தான் நாட்டை ஆள போறான். அவன் வந்துகிட்டே இருக்கான். இனி அடுத்து தமிழன் ஆட்சிதான் என்ற வசனம் விஜய்யை வருங்காலத்தில் முதல்வராக்கும் திட்டத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது
ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இதுமாதிரியான வசனம் வெளிவந்தால் நையப்புடை படத்திற்கு மட்டுமின்றி தெறி, கபாலி படங்களுக்கும் பிரச்சனை வரும் வாய்ப்பு இருப்பதாக கருதிய தாணு உடனே இந்த படத்தின் இயக்குனரை அழைத்து அந்த வசனத்தை வெட்டி எடுக்கும்படி உத்தரவிட்டாராம். விஜய்யை முதல்வராக்கும் திட்டத்துடன் எஸ்.ஏ.சி இணைத்த இந்த வசனத்தை தாணு கட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.