shadow

LRG_20150624112017210951

கடலூர்: கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை5:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 6:00 மணிக்கு வேதபாராயணம் நடந்தது. 7:30 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. 9:00 மணிக்கு திருமலையப்பன் சேவையில் வீதியுலா நடந்தது.

நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 27ம்தேதி, இரவு 7:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு துவாதச ஆராதனை நடக்கிறது. 29ம் தேதி காலை 10:00 மணிக்குதிருமஞ்சனம்,இரவு 7:00 மணிக்குவிடையாற்றிஉற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோவிந்தசாமி, செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், எழுத்தர்ஆழ்வார்ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply