புதுச்சத்திரம் அருகே கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது 3 மாணவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர்..
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள புத்திரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன்கள் கார்த்திக் (வயது 21), விஜய் (17). இதில் கார்த்திக் பண்ருட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டும், விஜய் கடலூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 வும் படித்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று கார்த்திக், விஜய் மற்றும் அவரது நண்பர்களான பூச்சிமேடு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (21), பழனிச்சாமி மகன் பாலகுமார் (20), திருமுருகன் மகன் கணபதி (20), மணிகண்டன் (21) ஆகிய 6 பேரும் அய்யம்பேட்டை கடற்கரைக்கு சென்று குளித்தனர்.
அங்கு அவர்கள் கடல் அலையில் விளையாடினர். அப்போது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் மாணவர்கள் சிக்கினார்கள். இதில் அலையில் சிக்கிய மூவரும் உயிரிழந்தனர்.
இதுபற்றி புதுசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply