முதல்வரை நேரில் சந்தித்த ‘கபாலி’ விநியோகிஸ்தர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் விரைவில் சென்சாருக்கு செல்லவுள்ளது என்றும் வரும் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கபாலி’ படத்தின் பாண்டிச்சேரி ரிலீஸ் உரிமையை பெற்ற லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார் என்பவர் நேற்று பாண்டிச்சேரி கவர்னர் கிரண்பேடியையும் முதல்வர் நாராயணசாமியையும் நேரில் சந்தித்தார். பாண்டிச்சேரியில் தமிழ் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வரும் கவர்னரும் திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஜி.பி.செல்வகுமாரிடம் உறுதி அளித்துள்ளனர். பாண்டிச்சேரியில்தான் பெருவாரியான திருட்டு டிவிடிக்கள் தயார் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.