நீதிபதி கர்ணன் தலைமறைவா? கைது செய்ய கொல்கத்தாவில் இருந்து வந்த போலீசார் திணறல்
மனநல சோதனைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியை கைது செய்ய நேற்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் கர்ணன் இல்லை. கைது நடவடிக்கை காரணமாக அவர் தலைமறைவு ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு நீதிபதியை கைது செய்ய உத்தரவிடுவது, அந்த உத்தரவை அடுத்து நீதிபதியே தலைமறைவு ஆவது என்பது இதுதான் முதல்முறை.
நீதிபதி கர்ணன் காரில் வெளியே சென்றதாக வீட்டு பணியாளர்கள் கூறினர். அவர் தற்போது காளகஸ்தியில் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து கொல்கத்தா போலீஸார் காளகஸ்திக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.