தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 42 உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 04
பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 07
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 07
பணி: பொதுமக்கள் தொடர்பு உதவியாளர்
காலியிடங்கள்: 01
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
பணி: சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 06
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
பணி: மீன்பிடி உதவியாளர்
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் கீழ் உள்ள பயிற்சி நிலையத்தில் 10 மாத பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,200.
பணி: ஆபீஸ் உதவியாளர்
காலியிடங்கள்: 02
பணி: துப்புரவுத் தொழிலாளர், காவலாளி, தோட்டக்காரர்
காலியிடங்கள்: 06
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்- 611 011.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnfu.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.