shadow

kumarasamyஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள புகார்களை அடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருவதாக வெளிவந்துள்ள தகவலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதோடு ஜெயலலிதாவை விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அளித்த தீர்ப்பில்  ஜெயலலிதா வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்..

இந்நிலையில்,  நீதிபதி குமாரசாமி  தனது உதவியாளர்களுடன் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனை தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல்  நடந்து வருவதாகவும் பெங்களூரில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply