shadow

download (2)

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது: நாகப்பட்டினம் மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 14 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் 2015 ஜனவரி 10 க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப்பிரிவு) எண்.119, நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் இடம் மற்றும் தேதி குறித்து தனியே தெரிவிக்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிறுவனம் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிவில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2014 ஜூலை 1-ல் 35 வயது முடியாதவராக இருக்க வேண்டும். தமிழக அரசின் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply