shadow

ஜீவாவின் அதிரடி நடவடிக்கையால் குவியும் படங்கள்

jivvaஜீவா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோ’ படத்திற்கு பின்னர் சூப்பர் ஹிட் வெற்றி என்று சொல்லக்கூடிய வகையில் எந்த படமும் கடந்த நான்கு வருடங்களாக அவருக்கு அமையவில்லை. இடையில் ‘என்றென்றும் புன்னகை’ சுமாராக ஓடினாலும், வசூலில் அந்த படம் திருப்தி கொடுக்கவில்லை.

எனவே அதிரடியாக ஜீவா, தன்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்துவிட்டாராம். மேலும் கதை நன்றாக இருக்க வேண்டும், டாப் ஹீரோயின் வேண்டும் என்ற கண்டிஷன்களை மட்டும் போட்டு தன்னுடைய சம்பளத்தை மூன்று கோடியில் இருந்து ஒன்றரை கோடியாக அதிரடியாக குறைத்துள்ளார். அவருடைய இந்த அதிரடி நடவடிக்கை நன்றாக வேலை செய்யத்தொடங்கிவிட்டது.

சம்பள குறைப்பிற்கு பின்னர் அவருக்கு திருநாள் , கவலை வேண்டாம் ஆகிய இரண்டு படங்கள் புக் ஆகியுள்ளது. இதில் திருநாள் படத்தில் நயன்தாராவும், கவலை வேண்டாம் படத்தில் கீர்த்தி சுரேஷும் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு படங்களில் நடிக்க முன்னணி நிறுவனங்கள் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து ஜீவாவுக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply