ரஜினி, கமல் வரிசையில் இணைவாரா ஜெயம் ரவி?
கடந்த மாதம் ஜெயம் ரவியின் ‘மிருதன்’ திரைப்படம் தமிழின் முதல் ஜோம்பி திரைப்படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவி, இந்த ஆண்டும் தனது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சக்தி செளந்திரராஜனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மீண்டும் ஜெயம் ரவி மற்றும் சக்தி செளந்திரராஜன் இணையவுள்ளதை இருவருமே தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர்.
இந்த படம் ‘மிருதன் 2’ படமாக இருக்கும் என கூறப்பட்ட போதிலும் இதுகுறித்து படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதால் இந்த படம் பிரமாண்டமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகின்றது. இந்த படத்தின் ஹீரோயின், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே எந்திரன், பாகுபலி, விஸ்வரூபம், கோ, டார்லிங் உள்பட பல படங்களின் இரண்டாவது பாகம் தயாராகி வருகையில் அந்த வரிசையில் மிருதன் படமும் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.