shadow

op and jayaஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மீண்டுள்ளதால் மிக விரைவில் அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுவரை பூட்டப்பட்டிருந்த முதல்வர் அறையை திறந்து சுத்தப்படுத்த ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலகிய பின்னர் அவரது அலுவலக அறை பூட்டப்பட்டு விட்டது. புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அறையை பயன்படுத்தாமல் தனது அறையில் இருந்தே முதல்வர் பணியை கவனித்து வந்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பதற்கு வசதியாக இன்றே ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 4 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply