ஜெயலலிதாவின் குலதெய்வ கோயிலுக்கு ரூ.1.6 கோடி நகைகள் நன்கொடை
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் அவ்வப்போது பயபக்தியுடன் வழிபடும் மைசூர் சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு ஜெயா பப்ளிகேஷன் மற்றும் கொடநாடு முகவரியில் இருந்து ரூ. 1.6 கோடி மதிப்பில் தங்க, வெள்ளி கவசங்கள் அளிக்கபட்டுள்ளன.
சாமுண்டேஸ்வரி கோயிலில் உள்ள கணேசர் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேற்று ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் சென்று அங்குள்ள கணேசர் கோயிலுக்கு ரூ. 42,29,614 மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கக் கவசங்களையும், ஆஞ்சநேயருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி கவசங்களையும் நன்கொடையாக அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த கோவில் ஜெயலலிதாவின் குலதெய்வம் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.