shadow

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும்: ஜெயலலிதா கடிதம்

jayalalithaகடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதையும் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1974, 1976ம் ஆண்டுகளில் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சர்வதேச கடல் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்க வகை செய்யும் திட்டத்துக்கு ரூ.1520 கோடியில் சிறப்பு ஒதுக்கீடு கோரப்பட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply