shadow

jaya and vaikoபோயஸ் தோட்டத்தில் ஒரு பாராளுமன்றம் கட்டினால் அதற்கு கண்டிப்பாக ஜெயலலிதாதான் பிரதமர் ஆவார். அவருக்கு அதில் போட்டியாக யாரும் இருக்க மாட்டார்கள் என்று இன்று சென்னையில் வைகோ பேசியுள்ளார்.

சென்னை மன்னடி பகுதியில் வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து இன்று காலை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக எந்த கூட்டணியில் இருக்கிறது என்பதை ஜெயலலிதா தெளிவுபடுத்தவேண்டும்.

அவர் பிரதமர் ஆவார் என்று கூறுவது பகல்கனவு. போயஸ் தோட்டத்தில் மாதிரி பாராளுமன்றம் ஒன்றை கட்டினால் அதில் மட்டுமே அவர் பிரதமர் ஆக முடியும். மற்றபடி இந்தியாவின் பிரதமர் ஜெயலலிதா ஆவார் என்பது நடக்கக்கூடியது அல்ல.

மேலும்2 ஜி வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான ஆ.ராசா தேர்தலில் எப்படி நிற்க முடியும்?” தேர்தல் கமிஷன் இதை எப்படி அனுமதித்தது என்றே தெரியவில்லை. என்று கூறிய அவர், இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கையை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

 

Leave a Reply