ஜெயலலிதா நினைவிடத்தில் திருவுருவச்சிலை. அலைமோதும் தொண்டர்கள் கூட்டம்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வணங்கி வருகின்றனர்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று அவரது உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துக்குமார் சார்பில் இந்தச் சிலையை அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஃபைபர் முலம் செய்யப்பட்ட இந்த ஜெயலலிதாவின் இந்தச் சிலை ஆந்திராவில் உருவாகியுள்ளது. இந்த சிலையை மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா உருவப்படத்தின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பார்ப்பதற்காகவும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.