shadow

festival 1     பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 27ஆம் தேதி அன்று தீர்ப்பை கேட்க எந்த சிறப்பு விமானத்தில் ஜெயலலிதா வந்தாரோ அதே விமானம் மீண்டும் ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு அழைத்து செல்ல பெங்களூர் விமான நிலையத்திக் எச்.ஏ.எல் என்ற விமானம் தயார் நிலையில் உள்ளது.

கடந்த 27ஆம் தேதியில் இருந்தே இந்த விமானம் பெங்களூர் விமான நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அல்லது நாளை ஜெயலலிதா இதே விமானத்தில் சென்னை வருகிறார்.

சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமீன் உத்தரவு ஆன்லைனிலேயே பெங்களூர் சிறை அதிகாரிகள் அனுப்பப்படும் என சுப்ரீம் கோர்ட் வட்டாரம் தெரிவித்துள்ளதால் இன்று மாலையே ஜெயலலிதா வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

festival 2

festival

Leave a Reply