இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக அமைந்துள்ள மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு நாங்கள் கண்டிப்பாக ஆதரவு கொடுப்போம்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியை அகற்றுவதற்காகவே நாங்கள் மூன்றாவது அணியை அமைத்துள்ளோம். அடுத்த பிரதமராக வருவதற்கு மோடிக்கும், ராகுல்காந்திக்கும் அருகதை இல்லை.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக 11 மாநிலக்கட்சிகள் இணைந்து மாற்று அணியை தேசிய அளவில் உருவாக்கியுள்ளோம். இந்த அணி தேர்தலில் மாபெரும் வெற்றியை  பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்றாவது அணியின் தலைவராக ஜெயலலிதா வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

Leave a Reply