சீமாந்திரா முதல்வராக ஜூன் 8ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த பின்னர் நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி பெருவாரியான வெற்றியை பெற்றது. இதேபோல் தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்றது. ஜூன் மாதம் 8ஆம் தேதி சந்திரபாபு நாயுடு சீமாந்திரா மாநிலத்திலும், சந்திர சேகர ராவ் தெலுங்கானா மாநிலத்திலும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளனர்.
சீமாந்திரா மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி, குண்டூர்-விஜயவாடா இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்ள உள்ளார். இந்த தகவல்களை தெலுங்குதேச கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
சீமாந்திரா மற்றும் தெலுங்கானாவில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.