shadow

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

jayalalithaa-modi02பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா அவரிடம் 29 அம்ச கோரிக்கை மனுக்களை கொடுத்து தமிழக நலன் குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து பேசிய பின்னர் சென்னை திரும்பினார். முதல்வர், பிரதமரிடம் வைத்த 29 அம்ச கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

‘தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களையும், 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும்.

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. மசோதாவில் அ.தி.மு.க கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்

மருத்துவ நுழைவுத் தேர்வை அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக் கூடாது.

தமிழக அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவிகளை உடனே வழங்க வேண்டும்.

உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்கக் கூடாது.

கூடங்குளம் அணுமின் நிலைய 2 வது அலகை உடனே தொடங்க வேண்டும்.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்”

என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply