shadow

முதன்முதலாக அப்பல்லோவுக்குள் அனுமதிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள்

1தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் அசாதாரண நிலை ஏற்பட்டது. முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருவதால் இந்த வதந்தியை கட்டுப்படுத்த முக்கிய இரண்டு பத்திரிகையாளர்களை மட்டும் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பரவி வரும் வதந்தியை தடுப்பதற்கும் முதல்வரின் உண்மையான உடல்நிலை குறித்து மக்களுக்கு விளக்குவதற்கும் தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே மற்றும் புதிய தலைமுறை டிவி கார்த்திகை செல்வன் ஆகிய இருவரும் அப்பல்லோ மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்ட பின்னரே முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை குறித்த தகவல் வெளிவந்தது. மேலும் முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்த நாள அடைப்பை சரி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் இன்னும் 24 மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் உடல் நிலையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து தெரிய வரும் என்ற தகவலும் இவர்கள் இருவர் மூலம்தான் வெளியாகியுள்ளது.

Leave a Reply