தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார மேடையில் அவர் பேசும்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவை வெள்ளையர்கள் கொள்ளையடித்தார்கள் என்றும், வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கியவுடன் காங்கிரஸ் கொள்ளையர்கள் இந்தியாவை சுரண்டி கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கர்ஜித்தார்.

தற்போது காங்கிரசிடம் இருந்து நாட்டை மீட்பதே தன்னுடைய தலையாய கடமை என்றும், மத்தியில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றும் அவர் மேலும் பேசினார்.

தமது வேண்டுகோளை பொதுமக்கள் ஏற்று மத்தியில் உள்ள மக்கள் விரோத அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என ஜெயலலிதா கூறியவுடன் கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply