சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவர் ஸ்பெஷல் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்ததில் இருந்து அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா தற்போது செயற்கை சுவாசம் இன்றி இயற்கையாக சுவாசிப்பதாகவும், வழக்கமான உணவுகளை எடுத்து கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சிறப்பு தனி வார்டில் ஒருசில நாட்கள் முதல்வரின் உடல்நிலை கூர்ந்து கவனிக்கப்படும் என்றும் அதன்பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.