முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் திடீரென பல்டி அடித்த போதிலும், ஜெயலலிதா உள்பட நான்கு பேர்களுக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஜாமீன் கிடைத்துவிட்டதாக தமிழக கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் அவை தவறான செய்திகள் என்றும் தற்போது வந்த அதிகாரபூர்வமான தகவலின்படி ஜெயலலிதா உள்பட நான்கு பேர்களின் ஜாமீன் மனுக்களும் நிராகரிப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.