shadow

Jayalalitha-Karunanidhiநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்த தமிழக வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி அரசின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும் அதிமுக தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும்

தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் கருணாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற கூற்றுப்படி, மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸின் முக்கிய தலைவர் ஜி.கே.வாசன் கூறியபோது,  மக்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருந்துள்ளது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து எதிர்காலத்தில் கட்சியை பலப்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

arivalalayam 1 winning 1aa winning 2a

Leave a Reply