அவருக்கு முன் நான் இறக்க வேண்டும். ஜெயலலிதா குறிப்பிட்டது யாரை?
தமிழக முதல்வராக இருந்து மறைந்த செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு நேற்று இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன், ஜெயலலிதா ஒருமுறை சோ அவர்களுடன் பேசி கொண்டிருந்தபோது, எனக்கு இவ்வளவு உறுதுணையாக இருந்து வருகின்றீர்கள். எனக்கு ஒரே ஒரு ஆசைதான். நான் உங்களுக்கு முன்னால் இறந்துவிட வேண்டும்’ என்று கூறியதாக கூறினார்.
ஜெயலலிதா சொன்னதை அப்போது தான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றும் ஆனால் இப்போது அவர் கூறியதுபோலவே நடந்ததை பார்த்து ஆச்சரியம் அடைவதாகவும் முருகன் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.