shadow

25IN_JASWANபாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் ஜஸ்வந்த் சிங் அக்கட்சியிலிருந்து விலகப் போவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் கூறுகின்றது.

ராஜஸ்தான் மாநிலத்தை ஜஸ்வந்த் சிங் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்தார்.. ஆனால் அவருக்கு இதுவரை தேர்தலில் போட்டியிட எந்த தொகுதியும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பார்மர் தொகுதி வேட்பாளராக, வெறொருவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பியான சோனாராம் சவுத்ரி அத்தொகுதியின் வேட்பாளராக ராஜ்நாத் சிங்கால் அறிவிக்கப்பட்டார்.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜஸ்வந்த் சிங் சுயேட்சையாக பார்மர் தொகுதியில்  போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு அவர் கேட்ட தொகுதி கொடுக்காததை அடுத்த பாஜகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய தலைவர்கள் பாரதிய ஜனதா மேலிடத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply